கேள்வி : காவல் துறையும், நீதிமன்றமும் பணம் உள்ளவர்களிடம் பணிந்துவிடுகிறதே.. இப்படியொரு அமைப்பு தேவையா..? – எஸ்.ராஜசியாமளா, மைசூர்.
ஞானகுரு :
தகுதி உள்ளது தப்பிப் பிழைக்கும் என்பதே இயற்கை நியதி. பலம் வாய்ந்த சிங்கம், யானையைக் கூட தன்னுடைய புத்திசாலித்தனத்தின் மூலம் மனிதன் அடிமையாக்கி விட்டான். அதே போல் பலம் அல்லது புத்திசாலித்தனத்தின் மூலம் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை கொடுமைப்படுத்தவும், அடிமைப்படுத்தவும் கொஞ்சமும் தயங்கவே மாட்டான்.
அப்படியெல்லாம் எளியவர்களுக்கு வலியவர்களால் எந்த கொடுமையும் நடந்துவிடக் கூடாது என்பதற்காகவே சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. பக்கத்து வீட்டுக்காரர் மிகுந்த பலசாலியாக இருந்தாலும், உங்கள் வீட்டுக்குள் நீங்கள் நிம்மதியாக வாழ முடிகிறது என்றால், அதற்கு இந்த சட்டங்களும் அவை ஏற்படுத்தியிருக்கும் பயமுமே காரணம். மனிதர்களுக்கு குறைந்தபட்ச நம்பிக்கை தரும் இந்த அமைப்புகளில் சில தவறுகள் இருக்கலாம். அதற்கு அந்த தவறுகளை களைய வேண்டுமே தவிர, இந்த அமைப்புகளை அல்ல.
gyaanaguru.com Changed status to publish September 6, 2024