கேள்வி : ஏதாவது சாதனை செய்தால்தான், மனிதனாகப் பிறந்து வாழ்ந்ததற்கு அர்த்தமா? – எஸ்.குமரேசன், சென்னை .
ஞானகுரு :
எந்தப் பறவையும் விலங்கும், அது வாழ்ந்த தடத்தை விட்டுச் செல்வதில்லை. சாதனை, வெற்றி என்ற குறியீடு எல்லாம் அடுத்தவருடன் ஒப்பிடும்போது உங்களுக்குக் கிடைப்பதுதான். நீங்கள் தனி மனிதனாக ஒரு தீவில் அகப்பட்டுக்கொண்டால், ஏதாவது சாதனைகள் செய்ய ஆசைப்படுவீர்களா அல்லது எப்படியாவது உயிர் வாழ்ந்தால் போதும் என்று நினைப்பீர்களா..?
பிறர் பாராட்டுவதற்காக சாதனை செய்ய வேண்டும் என்றோ வரலாறு உங்களை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும் என்றோ நினைக்க வேண்டாம். உங்களுக்கே ஏதேனும் சாதிக்க வேண்டும் என்று தோன்றி, அந்த பாதை இன்பமாக இருக்கிறது என்றால் மட்டும் சாதியுங்கள். இல்லையென்றால் இயல்பாக வாழுங்கள். காற்று போல் கண்ணுக்குத் தெரியாமல் கரைந்து போவதே போதும். இந்த உலகில் நிம்மதியாக வாழ்வதே மிகப்பெரும் சாதனை.
gyaanaguru.com Changed status to publish September 7, 2024