ஜெயம் ரவி, சுந்தர்.சி, மோடிக்கு குஷ்பு எச்சரிக்கை?
குழப்பமாக இருக்குதய்யா
யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் பொத்தாம் பொதுவாக நடிகை குஷ்பு வெளியிட்டிருக்கும் ஒரு பதிவு செம வைரல் ஆகியுள்ளது. இதையொட்டி அந்த பதிவில் குஷ்புவின் மிரட்டலுக்கு ஆளான நபர் ஜெயம் ரவியா அல்லது பிரதமர் நரேந்திர மோடியா என்று பட்டிமன்றமே நடக்கிறது.
குஷ்பு வெளியிட்டுள்ள பதிவில், ’’மனைவியை மதிப்பவன்தான் உண்மையான மனிதன். அன்றி மரியாதையின்றி அவர்களை விட்டுவிட்டு செல்பவன் உன்னதமான மனிதனல்ல. தன்னுடைய குழந்தைகள் இதனால் எப்படி பாதிக்கப்படுவார்கள் என்பதை அறியாத இவர்கள் சுயநலவாதிதான். மனிதநேயமும் சரியான புரிதலும் இல்லாதத் தனத்தால்தான் இதை செய்கிறார்கள்.
வாழ்க்கை ஒரு அழகான சுழற்சி சக்கரம். சுயநலத்தால் நீங்கள் செய்யும் சில தவறுகள் பூமராங்கை போல மீண்டும் உங்களையே தாக்கும். நீங்கள் அதையெல்லாம் உணரும் தருணத்தில் காலமே கடந்து போயிருக்கும். இதுதான் கசப்பான உண்மை. உங்களுடையக் குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் மனைவியை மதிப்பதென்பது சிறப்பானக் குணமெல்லாம் இல்லை. தேவையான அடிப்படை குணம். இதைப் புரிந்துகொள்ளாதவர்கள் மற்றவர்களிடமிருந்து மரியாதையைப் பெற முடியாது. உங்களை அளவு கடந்து நேசிக்கும் மனைவியை அவமதிப்பது நீங்கள் மனதளவில் எவ்வளவு கொடூரமானவர் என்பதையே காட்டுகிறது. அது இதயத்தை நொறுங்க செய்கிறது. தன்னை வாழ்க்கையில் முன்னேற்றிக் கொள்ள நினைக்கும் ஒரு மனிதன் முதலில் தன்னுடையக் குடும்பத்தைதான் முன்னேற்ற நினைப்பான். எல்லா நாளையும் மகிழ்ச்சியாக இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. ஆனால், பரஸ்பரம் மரியாதை இருக்கும்பட்சத்தில் கடினமான நாட்களை கூட நம்பிக்கையின் துணைக்கொண்டு கடக்கலாம்.
உங்களின் உலகமாக இருக்கும் குடும்பத்தையும் உங்களின் பக்கம் நின்று ஆதரவளிக்கும் நண்பர்களையும் மதிப்பதுதான் உங்களுக்கு வலிமையை கொடுக்கும். பிணைப்புமிக்க அன்பால் மட்டுமில்லை. சமரசமில்லாத மரியாதையும் இருந்தால்தான் காலத்தால் அழிக்க முடியாத வகையில் உறவை பேண முடியும். மரியாதை என்பது அடிப்படையானது. அது உங்களில் வீட்டிலிருந்து தொடங்க வேண்டும். இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளாத நபர் அன்பின் பாதையிலிருந்தும் நிறைவான வாழ்க்கையிலிருந்தும் விலகிச் செல்வார்” என்று கூறியிருக்கிறார்.
இது ஜெயம் ரவிக்கு குஷ்பு கொடுத்திருக்கும் அட்வைஸ் என்றாலும் பிரதமர் மோடிக்கும் பொருந்துமே என்று குஷ்புவை கலாய்த்து வருகிறார்கள். அதேநேரம், சுந்தர் சி விவாகரத்து கேட்டு மிரட்டுகிறாரா என்றும் சிலர் கேள்வி கேட்டிருக்கிறார்கள்.
இதுக்கு, நேரடியாகவே பெயரைப் போட்டு குஷ்பு பேசியிருக்கலாம்.