நெகிழ வைக்கும் குட்டிக் கவிதைகள்
வரிசை 6
சுருங்கச் சொல்லி மனதைத் தொடுவதே கவிதைகள். ஒரு சில கவிதைகளே காலத்தையும் வென்றவை. அப்படி சில கவிதைகள் இங்கே
வெறுமை
அன்பென்று ஏதுமில்லை
காதலென்று ஏதுமில்லை
காமம் என்று ஏதுமில்லை
பிறகு வேறெதெற்கு இவ்வளவும்?
தனியாக இருக்க பயப்படுகிறோம்
தனியாக இறக்க பயப்படுகிறோம்
- மனுஷ்யபுத்திரன்
சிறகு
பறவைகள் அறிவதெல்லாம்
இரண்டே திசைகள்
சோறிருக்கும் திசை
கூடிருக்கும் திசை
- கலாப்ரியா
ஆளுமை
ஆடும் வரை
ராஜா மந்திரி சிப்பாய்
ஆட்டம் முடிந்தபின்
அனைவருக்கும் ஒரே பெட்டி
– யாரோ