நெகிழ வைக்கும் கவிதைகள்
வரிசை 5
சுருங்கச் சொல்லி மனதைத் தொடுவதே கவிதைகள். ஒரு சில கவிதைகளே காலத்தையும் வென்றவை. அப்படி சில கவிதைகள் இங்கே
நிஜமும் நிலமும்
உன் நிலத்தின் வானம் என்று
நீ கருதிக் கொண்டிருக்கும் இந்த ஒன்று,
உண்மையில்,
வேறோர் உலகத்தின்
நிலமாக இருத்தல் கூடும்
- ரூமி
எனக்கு யாருமில்லை
நான் கூட.
– நகுலன்
பிரிவு
பறையர் சுடுகாடு
படையாட்சி சுடுகாடு
தலைமுழுக
ஒரே ஆறு.
– கவிஞர் அறிவுமதி