கவித்துவம்

மரங்கள் வீழ்வதில்லை

மரமொன்று

வீழ்ந்து கிடப்பதை

காணும்போது

கலங்கிநிற்பதில்லை காடு!

மக்கச்செய்து உரமாக்கி

இன்னும் பல மரங்களை

உருவாக்கி செழிக்கிறது காடு

இயற்கையின் நியதியால்…

மனிதனைப்போல்

வீழ்ந்தே விடுவதில்லை..

மரங்களும்… காடுகளும்!

– மலைநாடன் ஆசாத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *