மரங்கள் வீழ்வதில்லை
மரமொன்று
வீழ்ந்து கிடப்பதை
காணும்போது
கலங்கிநிற்பதில்லை காடு!
மக்கச்செய்து உரமாக்கி
இன்னும் பல மரங்களை
உருவாக்கி செழிக்கிறது காடு
இயற்கையின் நியதியால்…
மனிதனைப்போல்
வீழ்ந்தே விடுவதில்லை..
மரங்களும்… காடுகளும்!
– மலைநாடன் ஆசாத்