மந்திரச்சொல்

ஞானகுரு மந்திரச் சொல்

வரிசை 1

  • வெறுக்கிறார் என்பதற்காக, ஒருவரை நேசிக்காமல் இருந்துவிடாதே.
  • நம்பிக்கை நிறைந்தவர் ஒருபோதும் முதுமை அடைவதில்லை.
  • வனத்தை அழிப்பதற்கு ஒரு தீக்குச்சியும் வாழ்க்கையை அழிக்க ஒரு வார்த்தையும் போதும்.
  • பிறரை மன்னிக்கும் நேரத்தில்தான், உங்களுடைய காயம் குணமடைகிறது.
  • வாழ்க்கை உங்களுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுத்துக்கொண்டே இருக்கும். ஆம், அதுதான் நாளை.
  • பிறர் பாராட்டும்வகையில் வாழ ஆசைப்பட்டால், உங்கள் வாழ்க்கையை வாழவே முடியாது.
  • மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு கிடைக்கும் தோல்வி, வெற்றியைவிட சிறப்பானது.
  • சின்னச்சின்ன சந்தோஷங்களையும் அனுபவிக்கத் தெரிந்தவருக்குத்தான், பெரிய பெரிய சந்தோஷம் கிடைக்கும்.
  • மன்னிப்பது மிகவும் உயர்ந்த குணம், ஆனால் எதிரி செய்த எதையும் மறந்துவிடாதீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *