கவித்துவம்

நெகிழ வைக்கும் கவிதைகள்

வரிசை 1

சுருங்கச் சொல்லி மனதைத் தொடுவதே கவிதைகள். ஒரு சில கவிதைகளே காலத்தையும் வென்றவை. அப்படி சில கவிதைகள் இங்கே

வாழ்க்கை

எதையேனும் சார்ந்திரு

கவித்துவம், தத்துவம், காதல்

இங்கிதம் சங்கிதமிப்படி

எதன் மீதேனும் சாய்ந்திரு

இல்லையேல்

உலகம் காணாமல் போய்விடும்.”

  • வண்ணநிலவன்

தரிசனம்

கடவுளைக் கண்டேன்
எதையும் கேட்கவே தோன்றவில்லை
அவரும் புன்னகைத்துப்
போய்விட்டார்

  • ஆத்மாநாம்

இருப்பதற்கென்று
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம்

  • நகுலன்


காவியம்

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது

  • பிரமிள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *