உதயநிதி தலைமையில் 2026 தேர்தல்.
ஆலோசனைக் கூட்டத்தில் சீனியர்களுக்கு இடமில்லை.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான ஒருங்கிணைப்புக் குழுவை முதல்வர் ஸ்டாலின் அமைத்திருக்கிறார். இந்த குழுவின் மூத்த அமைச்சர் கே.என்.நேரு மட்டுமே இடம் பிடித்திருக்கிறார்.
அவரைத் தவிர தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, ஆர்.எஸ்.பாரதி ஆகியோருக்கு தேர்தல் பணியில் அத்தனை அனுபவம் கிடையாது. பொதுவாக தேர்தல் பணிக்குழுவில் இடம் பெறும் துரைமுருகன், பொன்முடி, ஐ.பெரியசாமி ஆகியோர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இது, மூத்த நிர்வாகிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக வட மாவட்டம் மற்றுக் கொங்கு பகுதிக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை என்பதும், பெண்கள் யாரையும் சேர்க்கவில்லை என்பதும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.
இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், சட்டமன்றத் தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பது மற்றும் கழகத்தில் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்புகள் தொடர்பான பரிந்துரைகளை கழகத் தலைவர் அவர்களிடம் வழங்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திராவிட மாடல் அரசின் சாதனைகள் தொடர்ந்திட, தமிழ்நாட்டின் உரிமைகளை காத்திட 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிக் கொடி நாட்டிடுவோம் என்று உதயநிதி கூறியிருக்கிறார். ஆக, 2026 தேர்தலை உதயநிதி தலைமையில் தான் தி.மு.க. எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டாலினே ஒதுங்கி நிற்கிறார் எனும்போது மற்ற சீனியர்களுக்கு என்ன வேலை என்று இளைஞர் அணியினர் குரல் எழுப்புகிறார்கள்