Description
மனிதரையும் நோயையும் ஒருபோதும் பிரிக்கவே முடியாது. பிறந்த தருணத்திலிருந்து மரணம் வரையிலும் நோய்கள் வந்துகொண்டும், போய்க்கொண்டும் இருக்கின்றன. இயல்பான செயல்பாடுகளுக்கு தொந்தரவு ஏற்படாத வரையிலும் நோய் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.
தொந்தரவு தரும் நேரத்தில் மட்டுமே நோயை கவனிக்கிறார்கள். உடனடியாக நோயிலிருந்து மீள்வதற்கு பல்வேறு முயற்சிகள் எடுக்கிறார்கள். சில நாட்களில் நோய் தீரவில்லை என்றதுமே, இந்த நோயிலிருந்து மீளமுடியாமல் போகுமோ என்ற அச்சம் வந்துவிடுகிறது. அவர்களுடைய முழு சிந்தனையும் நோயைப் பற்றி மட்டுமே இருக்கிறது.
இது, நோயின் வீரியத்தை அதிகப்படுத்துவதுடன், அக்கம் பக்கத்தினரையும் துன்பத்தில் ஆழ்த்துகிறது.
ஆகவே, நோய் வரும் நேரத்தில் மருந்து எடுத்துக்கொள்வதற்கு முன்பே நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். இதற்கான எளிதான வழிமுறைகளை சுட்டிக் காட்டுகிறார் நூலாசிரியரும் மனவள ஆலோசகருமான எஸ்.கே.முருகன்.
Reviews
There are no reviews yet.